மக்கள்செறிந்துவாழும் தம்பட்டையில் இராணுவ முகாம்?இதுதானா ஆளுந்தரப்பு தமிழ்அரசியல்வாதிகளின் அபிவிருத்தி?அம்பாறை த.அ.கட்சி கூட்டத்தில் சாணக்கியன் எம்.பி.கேள்வி.

மக்கள்செறிந்துவாழும் தம்பட்டையில் இராணுவ முகாம்?  அமைக்கப்பட்டுவருகின்றது. மீண்டும் ஓர் இருண்ட யுகத்திற்குள் செல்கின்றோமா? அபிவிருத்தி என்ற போர்வையில் எமது பல பிரதேசங்களின் வளங்கள் அபரிக்கப்படுகின்றது. எமது வடக்கு கிழக்கு மக்களை ஏமாற்றி கடந்த காலத்திலே வாக்குகள் பெற்றெடுத்த ஆளுந்தரப்பு அரசியற் பிரமுகர்கள் யாரும் இவை தொடர்பில் குரல்கொடுத்ததாகத் தெரியவில்லை.இதுதானா ஆளுந்தரப்பு தமிழ்அரசியல்வாதிகளின் அபிவிருத்தி?
 
இவ்வாறு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத்தமிழரசுக்கட்சியின் அம்பாறை மாவட்ட புனரமைப்புக்கூட்டம் திருக்கோவிலில் நேற்றுமுன்தினம் அதன்தலைவரும் யாழ்.மாவட்ட முன்னாள்பாராளுமன்ற உறுப்பினருமான  மாவைசேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது.
 
அங்கு சாணக்கியன் எம்.பி. மேலும் பேசுகையில்:
அபிவிருத்தி என்ற போர்வையில் எமது பல பிரதேசங்களின் வளங்கள் அபரிக்கப்படுகின்றது. இது எமது அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகின்றது. அம்பாறை மாவட்டத்திலும் இல்மனைட் பிரச்சினை பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.
எங்களுக்குள்ளேயே சிலரை வைத்து பிரச்சினைகளை வளர்த்துவிட்டு அதில் தாங்கள் பலனடைவதற்குப் பலர் முயற்சிக்கின்றார்கள்.
 
கடந்த காலங்களில் அபிவிருத்தி என்ற விடயங்களை நம்மவர்களும் மேற்கொண்டார்கள். ஆனால் அவர்கள் விளம்பரப்படுத்தவில்லை. ஆனால் நாங்கள் செய்யத்தவறிய ஒரே ஒரு விடயத்தை மாத்திரம் விளம்பரப்படுத்தி கடந்த தேர்தலில் எங்களுடைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு ஒரு தனிநபரின் செயற்பாடு காரணமாக இருந்தது.
 
எங்களுக்குள்ளேயே சிலரை வைத்து பிரச்சினைகளை வளர்த்துவிட்டு அதில் தாங்கள் பலனடைவதற்குப் பலர் முயற்சிக்கின்றார்கள் என்றும் அவர் மேலும்தெரிவித்துள்ளார்.
நீண்டநாட்களுக்குப்பிறகு கட்சிக்கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரனும் கலந்து சிறப்பித்தார்

Related posts