மட்டக்களப்பிலும் மதிஉரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 13,வது நினைவு

மட்டக்களப்பு வெல்லாவெளியில் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 13,வது ஆண்டு வணக்க நிகழ்வு இன்று 14/12/2019 சனிக்கிழமை ஜனநாயகப்போராளிகள் கட்சியின் பிரதி தலைவர் நகுலேஷ தலைமையில் இடம்பெற்றது.இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் பொதுச்சுடர் ஏற்றிவைத்தார். 
 
ஜனநாயக பொராளிகள் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் மலர் அஞ்சலி வணக்கம் செலுத்தினர்.
 
ஜனநாய போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் சாந்தன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றினர்.

Related posts