மட்டக்களப்பில் காணியை ஏழைகளுக்கு தானமாக வழங்கிய செல்வந்தர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராம புறங்களிலிருந்து வாழும் தனக்கு என்று காணி இல்லாமல் வாடகை வீட்டில் வாழ்பவர்,மாற்றுத்திறனாளிகள்,கணவனை இழந்த விதவைகள் ,நாடோடி போன்று வாழ்ந்தவர்களுக்கு தனது சொந்த காணியை எந்த ஒரு பிரதிபலன் எதிர்பாராது 224 ஏழைகளின் வாழ்க்கைக்கு அத்தாவசியமான நிலத்தை வழங்கிய செயல் மட்டக்களப்பிலுள்ள பலரை வியக்க வைத்துள்ளது.
இந்த காணியை வழங்கிய நன்கொடையாளர் கு.லவக்குமார் பரோபகாரியாவர் .இவர் மட்டக்களப்பிலுள்ள கிரான் பிரதேசத்தை சேர்ந்த சமுகப்பற்றாளரான குருசுமுத்து லவக்குமார்  என்பவராவர் .சித்திரைப் புத்தாண்டு தினத்தில் 224 ஏழைகள் மனதில் நம்பிக்கையையும் உறுதியையும் ஏற்படுத்தியுள்ளது.
தனது காணி 15ஏக்கரை பிரித்து கிரான் எத்தலை மேட்டுக்காடு பகுதியில் தானமாக பகிர்ந்தளித்துவிட்டு இக்காணி பெற்ற ஏழைகளின் பிள்ளைகளின் கல்வி ,மேம்பாடு,பொருளாதரம் விருத்தி கருதி இன்னும் ஊக்குவிப்பதற்காக துணை நிற்பேன் என கூறி வழங்கினார்.
அத்தோடு காணி வழங்கிய பகுதியில் மக்கள் குடியேறி வசிக்கவும் அவர்களுக்கு தேவையான இறை வழிபாட்டுக்கான ஆலயம் மற்றும் பாடசாலைகளுக்கும் தனித்தனியாக காணி பிரித்து கொடுத்து ஒரு மாதிரிக்கிராமத்தை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts