மட்டக்களப்பில் திறக்கப்பட்ட பொலிஸ் நடமாடும் சேவை நிலையம்

மட்டக்களப்பு, கோப்பாவெளி கிராமத்தில் பொலிஸ் நடமாடும் சேவை நிலையமொன்று இன்று (22) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எ.எம்.ஏ.சமரகோன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எம்.நுவான் மென்டிஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பொலிஸ் நடமாடும் சேவை நிலையத்தை திறந்துவைத்தார்.

இதன்மூலம் இப்பகுதி மக்களுக்கு எந்நேரமும் தங்களது சேவையை வழங்க முடியுமெனவும் மக்கள் தமது பிரச்சினைகளுக்கான உரிய தீர்வை விரைவாக பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எம்.நுவான் மென்டிஸ் இதன்போது தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் பொலிஸ் உயரதிகாரிகள், மத குருமார்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related posts