மட்டக்களப்பில் தொடரும் தற்கொலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை 

கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட முனைக்காடு பிரதேசத்தில் மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் இன்று (01) மாலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.
 
நாகதம்பிரான் கோயில் வீதி முனைக்காடு (வடக்கு) பிரதேசத்தைச்சேர்ந்த யோகராசா நிலோஜன் என்பவரே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.
 
குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வரும் மாணவன் சம்பவ தினத்தன்று பாடசாலைக்கு செல்லாததால் மாணவனின் தாயார் ஏன் பாடசாலை போகவில்லை எனக்கேட்டதாகவும் தான் பாடசாலை அதிபரிடம் முறைப்பாடு செய்யப்போவதாக மாணவனிடம் கூறியதையடுத்து மாணவன் தனது கற்கை அறைக்கு சென்றவர் வெளியில் வராதநிலையில் அவரின் உறவினர்கள் வீட்டின் கூரையின் மேல சென்று பார்த்த போது மாணவன் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டதாகவும் பின்னர் அறையின் கதவினை திறந்து தூக்கில் இருந்து மீட்டெடுத்த போது அவர் மரணமடைந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்ததுடன் அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இளவயதினர் மற்றும் குடும்பஸ்தர்கள் என அதிகமானவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதிவான் வி.தியாகேஸ்வரன் அவர்களின் உத்தரவிற்கமைவாக  மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்ப இடத்திற்கு சென்று சடலத்தினை பார்வையிட்டார். பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்;டாhர்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Related posts