மட்டக்களப்பில் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அடையாள உண்ணாவிரத போராட்டம்.!

ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதல்களுடன் சம்பந்தப்படுத்தி விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கும் அமைச்சர்களையும்,ஆளுநர் களையும் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்பதோடு அவர்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தக் கோரியும் சனிக்கிழமை(1)அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம்-வியாளேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் “ஜனாதிபதியே..! இனவாத ஆளுநர்களை நீக்குவதில் தாமதம் ஏன்? ” ,”பிரதமரே…! அமைச்சர் றிசாட்டை உடன் பதவி நீக்கு”,”ஜனாதிபதியே…!நீதிபதியை மாற்றியவர் ஆளுநரா…?” எனத் தெரிவித்து அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.இவர்களுடன் முற்போக்கு தமிழர் அமைப்பின் அமைப்பாளர்கள்,உறுப்பினர்கள்,கலந்து கொண்டார்கள்.

https://www.facebook.com/100015699854970/videos/540516026481721/?t=31
https://www.facebook.com/100015699854970/videos/540516026481721/?t=31


Related posts