மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு – தமிழ் உணர்வாளர்கள்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் என்ற ஏற்பாட்டுக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ் உணர்வாளர்கள் ஏற்பாட்டுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள பன்குடாவெளி வாவிக் கரையோரத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18.05.2018) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் காலை 9 மணி தொடக்கம் மாலை 6.30 வரை இடம்பெறவுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இரத்ததானம், அன்னதானம், ஆத்ம சாந்திப் பூஜை, உணர்வுபூர்வமாக ஆயிரம் சுடர்கள் ஏற்றி வைத்தல் போன்ற நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts