மட்டக்களப்பு காத்தான்குடியில் தனிமைப்படுத்தலையடுத்து கடைகள் அடைப்பு இராணுவத்தினர் பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில்

மட்டக்களப்பு காத்தான்குடிய பிரதேச செயலகப் பிரிவில்  ஐந்து நாட்களுக்கு தனிமைப்படுத்தல் அடுத்து அங்கு இராணுவத்தினரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.  
 
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதையடுத்து அந்த பகுதி 5 நாட்களுக்கு தனிமைப்படுத்தபட்டுள்ளதாக அரசாங்க அதிபர் கே. கருனாகரன்  அறிவித்திருந்தார் 
 
இதனையடுத்து காத்தான்குடி பிரதேசம் முற்றாக கடைகள் அரச  தினைக்களங்கள் அனைத்தும் மூடப்பட்டு  சனநடமாற்றம் இன்றி வெறிச்சேடியுள்ளதுடன் அந்த பகுதியில் இராணுவத்தினரும் பொலிசாரும் வீதிகளில் பாதுகாப்பு நடவடிக்கையில்  ஈடுபட்டுவருகின்றதுடன் பொலிசார் வீதி ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றனர்.

Related posts