மட்டக்களப்பு – கொழும்பு விமான சேவை வெள்ளிக்கிழமை ஆரம்பம்

மட்டக்களப்புக்கும் கொழும்புக்குமிடையிலான மற்றுமொரு உள்ளுர் விமான சேவையொன்று எதிர்வரும் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை சுற்றுலா கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ.எம்.ஜௌபர் தெரிவித்தார்.

 இதன் முதலாவது சேவையினை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்த வைபவத்தில் இராஜாங்க அமைச்சர்களான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, அலி சாஹீர் மௌலானா உட்பட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த விமானசேவை திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் இடம் பெறவுள்ளன.

இந்த தினங்களில் தினமும் காலையில் 10 மணிக்கு கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு மட்டக்களப்பு உள்ளுர் விமான நிலையத்தினை வந்தடையும். பின்னர் 11.30 மணிக்கு திருகோணமலைக்கு சென்று அங்கிருந்து மீண்டும் மட்டக்களப்புக்கு வந்து பின்னர் மாலை 3.30 மணிக்கு கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி புறப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts