மட்டக்களப்பு பனிச்சையடி வீதி பத்து இலட்சம் ரூபா நிதியில் புனரமைப்பு வேலை ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதான அமைப்பாளர்  ஜீ.ஹரிதரன் கிரியின் கோரிக்கைக்கு இணங்க பனிச்சையடி பிள்ளையார் கோவில் வீதி சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் த.கௌரி அவர்களின் முயற்சியினால் 10 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் (2) புனரமைக்கப்பட்டது.

இவ்வீதியானது மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது.இவ்வீதியால் பயணிக்கும் பொதுமக்கள்,மாணவர்கள்,வாகனச்சாரதிகள் மிகுந்த அசௌரியங்களை எதிர்நோக்கியிருந்தார்கள்.இவ்வீதியின் அவலநிலையை கருத்திற்கொண்டே வீதி புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பனிச்சையடி பிள்ளையார் கோயில்வீதியின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் த.கௌரி தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் பனிச்சையடி கிராம சேவை உத்தியோகத்தர்,பனிச்சையடி ஆலய நிர்வாக உறுப்பினர்கள்,கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவரும்  நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.

Related posts