மட்டக்களப்பு – புதுமுகத்துவாரம் பகுதியில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுமுகத்துவாரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (26) காலை எரிந்த நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
புதுமுகத்துவாரம் பகுதியில் 81 வயதுடைய 7 பிள்ளைகளின் தந்தையான ஒருவர் பிள்ளைகளின் பராமரிப்பில் தனிமையில் வாழ்ந்துவந்த நிலையில் நேற்று மாலை அவரது மகன் அவரைப் பார்க்கச் சென்றபோது வீட்டிற்குள் தீப்பரவல் ஏற்பட்டதை அவதானித்ததைத் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததன் பின்னர் தனது தகப்பனார் தீயினால் எரிந்து இறந்திருப்பதை அவதானித்ததன் பின்னர் பொலிசாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் காத்தான்குடி பொலிசார் இன்று சடலத்தை மீட்டுள்ளனர்.
 
மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற  நீதிபதி பீற்றர் போல் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்ப இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்ட பின்னர்  சடலத்தினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
 
சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts