மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சமுர்த்தி திணைக்களப் பிரிவின் முன்னேற்ற மீளாய்வுிக் கூட்டம்

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச  சமுர்த்தி திணைக்களப் பிரிவின் 2ம் காலாண்டு முன்னேற்ற மீளாய்வுிக் கூட்டம் நேற்று 27ம் திகதி பிற்பகல் நடைபெற்றது.

 
மண்முனை மேற்கு பிரதேச உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வின்போது இப் பிரதேசத்திலுள்ள கரவெட்டி சமுர்த்தி  சமுதாய வங்கி, புதுமண்டபத்தடி சமுர்த்தி சமுதாய  வங்கி மற்றும் பிரதேச சமுர்த்தி வங்கிச் சங்கம் ஆகியவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கிராம பிரிவுகளின் முன்னேற்றங்கள் பற்றியும் ஆராயப்பட்டது.
 
 
இதன்போது முன்னேற்றம் குறைவாக காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என உதவி பிரதேச செயலாளரால் உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
 
இந் நிகழ்வில் சமுர்த்தி தலைமை முகாமையாளர் கலைச்செல்வி வாமதேவா, முகாமைத்துவப் பணிப்பாளர் க.தங்கத்துரை, திட்ட முகாமையாளர் எஸ்.ரஜேந்தினி, வங்கி முகாமையாளர் அ.பிரியதர்சினி, க.தில்லையம்பலம் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
 

Related posts