மட்டக்களப்பு மண்முனை  மேற்கு கோட்ட  மட்ட  மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி – 2022

மட்டக்களப்பு மண்முனை  மேற்கு கோட்ட  மட்ட  மெய்வல்லுனர் திறனாய்வு 2022 ஆம் ஆண்டுக்கான போட்டி நிகழ்வுகள் மட்டக்களப்பு  மண்முனை மேற்கு நாவற்காடு நாமகள்  வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
 
மண்முனை  மேற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.முருகேசுப்பிள்ளை  தலைமையில் நடைபெற்ற கோட்ட  மட்ட  மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நிகழ்விற்கு பிரதம அதிதியாக மண்முனை  மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம்  மற்றும் விசேட அதிதிகளாக  மண்முனை  மேற்கு  வலயக்கல்வி அலுவலக பிரதி கல்விப்பணிப்பாளர்கள், பாடசாலைகளின்  அதிபர்கள்  கலந்துகொண்டனர்.
 
மண்முனை  மேற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற மண்முனை மேற்கு கல்விவலயத்திற்குட்பட்ட    பாடசாலைகளின் முதலாம் ஆண்டு தொடக்கம் 13 ஆம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்கிடையில்  நடாத்தப்பட்ட  2022 ஆண்டுக்கான மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு போட்டி நிகழ்வுகளில்  பங்கு பற்றி வெற்றி பெற்ற பாடசாலைகளின் மாணவர்களுக்கான  சான்றிதழ்களுடன் வெற்றி கிண்ணங்களும், வெற்றி பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
 
இதேவேளை விளையாட்டு போட்டி நிகழ்வில் கலந்துகொண்ட  பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள்  உடற்கல்வி ஆசிரியர்கள், பாடசாலை விளையாட்டுத்துறை  பயிற்றுவிப்பாளர் இடையில்  போட்டிகள் நடாத்தப்பட்டு வெற்றி  பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
 
மண்முனை  மேற்கு கல்வி கோட்ட  மட்டத்தில்  நடாத்தப்பட்ட  பாடசாலைகளுக்கிடையிலான 2022 ஆண்டுக்கான மெய்வல்லுனர் திறனாய்வு  விளையாட்டு போட்டியில்  முதலாம் இடத்தினை மகிழவெட்டுவான் வித்தியாலயமும்,  இரண்டாம் இடத்தினை கன்னங்குடா வித்தியாலயமும், மூன்றாம் இடத்தினை நாவக்காடு நாமகள்  வித்தியாலயமும்  பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts