மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையுடன் சந்திப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று மட்டக்களப்புநகரில் உள்ள பிரசித்திபெற்ற ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்திற்கு வருகைதந்து அங்கு வழிபாடுகளை மேற்கொண்டார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதிவேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகமட்டக்களப்புக்கு நேற்று வருகைதந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு பகுதிகளுக்கும் சென்றுதேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

மட்டக்களப்பில் தங்கியிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்திற்கு வருகைதந்து அங்குவழிபாடுகளை மேற்கொண்டார்.ஆலயத்திற்கு வருகை தந்த பிரதமரை ஆலயநிர்வாகத்தினர், ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் வரவேற்றதுடன் பொன்னாடையும் போர்த்தி கௌரவித்தனர். 

இந்த விஜயத்தின் போது அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் இணைந்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு ஆயர் இல்லத்திற்கு சென்ற பிரதமர் அங்கு மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினையும் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

 

Related posts