மட்டக்களப்பு மாநகரசபையினால் பூநொச்சிமுனை வடிகானை துப்பரவு செய்யும் பணி

மட்டக்களப்பில் டெங்குவின் தாக்கம் அதிகரிக்கப்பட்டள்ள நிலையில் கட்டுப்படுத்தும் நோக்கோடு மட்டக்களப்பு மாநகரசபையினால் மஞ்சந்தொடுவாய் – காத்தான்குடி எல்லை வீதியை ஊடறுத்துச் செல்லும் பூநொச்சிமுனை வடிகானை துப்பரவு செய்யும் சிரமதானப் பணிஇன்று (12) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபை சுகாதார ஊழியர்கள், நாவற்குடா பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ரி. தீபகுமாரன் மற்றும் பொதுமக்கள். இணைந்து மேற்கொண்ட இப்பணியில் முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க. சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்களான சிவம் பாக்கியநாதன், தி. சிறிஸ்கந்தராசா, மொகமட் நிப்லார், ம.நிஸ்கானந்தராஜா, ஸ்ரீபன் ராஜன் மற்றும் து.மதன் ஆகியார் கலந்து கொண்டனர்.

Related posts