மட்டக்களப்பு மாவட்டசெயலகம் ஏற்பாடு செய்திருந்த தேசிய போதைப் பொருள் ஒழிப்புவாரத்தின்இறுதிநாள் மாவட்ட நிகழ்வு

மட்டக்களப்பு  மாவட்டசெயலகம் ஏற்பாடு செய்திருந்த தேசிய போதைப்பொருள் ஒழிப்புவாரத்தின்இறுதிநாள் மாவட்ட நிகழ்வு மட்டக்களப்பு நகர காந்தி பூங்காவில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம்உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.


இங்கு போதைப்பொருளை தடுப்போம் என்ற ஜனாதிபதிசெயலக சத்தியப்பிரமாணம் இங்கு கலந்துகொண்ட பெருமளவு அரச பணியாளர்கள்இமற்றும் பொதுமக்களால்எடுத்துக்கொள்ளப்பட்டதுடன்போதைப்பொருள் பாவனையை தடுக்கும் பத்தாயிரம் கையொப்பங்கள் பெறும்செயல்பாடும்இங்குமாவட்ட அரசாங்க அதிபர்மாணிக்கம்உதயகுமாரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது


இத்துடன் போதை ஒழிப்பு தொடர்பானவிளம்பர பலகை நடுதல் வீதிநாடகமும் போட்டிநிகழ்ச்சிகளில்வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதல்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
.இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் நவரூபரஞ்சனி முகுந்தன் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்திபிரதம கணக்காளர். கே.ஜெக தீஸ்வரன் உதவிமாவட்டசெயலாளர் ஏ.நவேஸ்வரன் மட்டக்களப்பு நகர முஸ்லிம் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவரும் பிரபலவர்த்தகருமான கே.எம்.கலீல் மற்றும் திணைக்கள தலைவர்கள்இபிரதேச செயலாளர்கள்பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்  

????????????????????????????????????

Related posts