மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 114 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை  114 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நா.மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – 12வவுணதீவு- 16காத்தான்குடி -15களுவாஞ்சிகுடி -08 ஆரையம்பதி -11வாழைச்சேனை – 12கோறளைப்பற்று மத்தி – 14
செங்கலடி – 7ஏறாவூர் -4ஓட்டமாவடி – 4வெல்லாவெளி -03கிரான் -02 பட்டிப்பளை -06
 
கிழக்கில் முதலிரு அலைகளில் 26பேர் பலியாகியிருந்தனர். ஆனால் மூன்றாவது அலையில் இதுவரை 100பேர் பலியாகியுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.
கிழக்கிலுள்ள 10 கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 783 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர் 
 
 
 
மேலும் கடந்த 24 மணித்தியாலத்தில் கிழக்கு மாகாணத்தில்  173 பேர் கொரோனா தொற்றுக்குளாகியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது 

Related posts