மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.



(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு


மட்டக்களப்பு மாவட்டத்திலும் கொவிட் தொற்று அதிகரித்துவரும் நிலையில் இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு மாவட்டத்திலுள்ள அநேகமான தொண்டு நிறுவனங்கள் பாரிய பங்களிப்பினை ஆற்றி வருகின்றனர்.

அந்த வகையில் அக்சன் யுனிட்டி லங்கா நிறுவனமும் பாரிய பங்காற்றி வரும் நிலையில் மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளுக்கு பாரிய பங்காற்றிவருகின்றது.

அதனடிப்படையில் அக்சன் யுனிட்டி லங்கா நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts