மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, நுவரெலியா, மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணி வரை இந்த எச்சரிக்கை நீடிக்கப்படவுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை காரணமாகவே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts