மண்டூரில் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் கோட்டமுனை  பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான முத்துவேல் நேசராசா (45) என்பவர் தனக்குத்தானே கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  (24) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது
 

குறித்த நபர் மனைவியுடன் ஏற்பட்ட தகராற்றினால் வீட்டில் யாரும் இல்லாத வேளையில் அவரின் வீட்டு அறையில் உள்ள வளையில் தனக்கு தானே கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக காணப்பட்டார்.

களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் அவர்கள் விசாரணைகளின்  பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி தடயவியல் பொலிஸார் மற்றும் வெல்லாவெளி பொலிஸாருக்கு உத்தரவிட்டார். 
 

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related posts