மண்டூர் பிரதேசத்தில் வீடு புகுந்து கைவரிசை-மூவர் வைத்தியசாலையில் அனுமதி

 
 
வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் தனியார் வீடொன்றினுள் சில நபர்கள் சென்று வீட்டு உரிமையாள் மன்றும் அவரின் உடைமைகளை அடித்து சேதப்படுத்திய சம்பவம் நேற்று நள்ளிரவில் இடம் பெற்று;ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
நீண்ட நாட்களாக இருவருக்கிடையில் இருந்து வந்த பகை வாய்த்தர்கத்தில் ஆரம்பித்ததையடுத்து இரு வருக்கிடையில் கைகலப்பு ஏற்பட்ட நிலையில் குறித்த நபரின் வீட்டிலிருந்த அவரின் அனைத்து உடமைகளும் சண்டையில் ஈடுபட்டவர்களினால் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இரு தரப்பின் மூவர் காயமடைந்த நிலையில் 1990 இலக்க அவசர காவுவண்டியூடாக களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றாகவும்.குறித்த நபரின் வீட்டுக்குள் சென்று சண்டையில் ஈடுபட்ட ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிவான் அவர்களின் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது குறித்த நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கும் படி நீதிமன்ற நீதிபதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts