மண்முனை மேற்கு பிரதேசத்திற்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் – 2021

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்புக்குழு பிரதி தலைவரும் பொது ஜன பெரமுன கட்சியின் மாவட்ட அமைப்பாளருமான பா.சந்திரகுமார்  தலைமையில் இன்று (16) மண்முனை மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இதன்போது கடந்த ஆண்டு இப்பிரதேச செயலகப்பிரிவில் மெற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக அனுமதி கிடைக்கப்பெற வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
 
மேலும் இப்பிரதேசத்தின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், சமுர்த்தி, சுற்றாடல், விவசாயம், குடிநீர், வனலாகா உட்பட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்  சதாசிவம் வியாழேந்திரன் உட்பட  உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், சமுர்த்தி தலைமைமை முகாமையளர், மாவட்டத்தின் சகல திணைக்களங்களின் தலைவர்களும் அதிகாரிகளும் பிரசன்னமாயிருந்தனர்.

Related posts