மரணவீட்டுக்கு சென்று திரும்பியவர் தூக்கிட்டு தற்கொலை-கொக்கட்டிச்சோலையில் சோகம்

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை பிரதேசத்ததைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான குருகுலசிங்கம் நமச்சிவாயம் வயது (41) என்பவர் ;;தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
குறித்த நபர் தனது உறவினரின் மரண வீட்டுக்கு சென்று இன்று அதிகாலை வீடு திரும்பியதாகவும் சம்பவ தினத்தன்று அதிகாலை அவரின் மனைவி வெளியில் வந்து பார்த்தவேளை வீட்டின் வெளி மண்டபத்தில் தனக்கு தானே தூக்கிட்டிருந்ததாகவு பின்னர் அயலவர்களின் உதவியுடன் தூக்கில் இருந்து மீட்டெடுத்தபோது அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
 
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற் நீதிவான் ஏ.சி.றிஸ்வான்  அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார்  சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன

Related posts