மருத்துவத்துறைக்கு தெரிவாகி மண்டூர் மண்ணுக்கு பெருமைசேர்த்துள்ளார்- விஷாகரபவன்

வெளியான 2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  விஞ்ஞான பிரிவில்  மண்டூர் பிரதேசத்தைச்சேர்ந்த தர்மசீலன் விஷாகரபவன் 3 A சித்திகளுடன்  மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார் 
 
தனது ஆரம்பக்கல்வியை மண்டூர் இராமக்கிருஷ்ண வித்தியாலயத்தில் கற்று பின்னர் மட்.கோட்டமுனை க.வித்தியாலயம், மட்.மெதடிஸ்த மத்திய கலூரி, உயர் தரகல்வியை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் கற்றார். இந்த சாதனை மூலம் தான் பிறந்த மண்டூர் மண்ணுக்கும்,பாடசாலை மற்றும் கற்பித்த ஆரிரியர்களுக்கும் அத்தோடு தன்னை பெற்றேடுத்த தந்தை ஓய்வுநிலை அதிபர் சோ.தர்மசீலன்,தாய் நவகீதா தர்மசீலன் அதிபர் கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரி ஆகியோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Related posts