மாகாண , பிராந்திய சுகாதாரசேவைப் பணிப்பாளர்கள் கல்முனைக்களத்தில்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை எல்லைகுட்பட்ட 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் சனிக்கிழமை(24) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம் தெளபீக் ,கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் ஆகியோர் சகல பிரதேசங்களுக்கும் விஜயம்செய்து களத்தில் நின்று பார்வையிடுவதைக்காணலாம்.

படங்கள் வி.ரி.சகாதேவராஜா
 
 

Related posts