மாணவர்களின் எதிர்ப்பினால் புகை மண்டலமான நாடாளுமன்ற சுற்றுவட்டாரம்

நாடாளுமன்ற சுற்றுவட்டாரத்தை அண்மித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை பகுதியில் நாடாளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்கும் வகையிலேயே இக்கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக பத்தரமுல்லை பகுதியில் நாடாளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகில் போராட்டக்காரர்களை கலைப்பதற்காக இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக ராஜகிரிய மற்றும் பத்தரமுல்ல பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts