மாணவர்களுக்காக புதிய சேவை ஒழுங்கு செய்ய அரசாங்கம் நடவடிக்கை

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விசேட பேருந்து சேவை ஒழுங்கு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ரயில் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுவரும் போராட்டம் காரணமாக, நாளைய தினம் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் இராணுவ பேருந்து சேவை நாளைய தினம் மாணவர்களுக்காக சேவையில் ஈடுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts