மாணவர்களுக்கான தமிழ் பாடத்திற்கான செயல்முறை பயிற்சி

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய்  காரணமாக அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டு  மீண்டும் கல்வி நடவடிக்கைக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும்வகையில்  விசேட  செயல்  திட்டங்கள்    முன்னெடுக்கப்பட்டு வறுகின்றன

இதற்குஅமைய மட்டக்களப்பு வலயக்கல்விப்  பணிப்பாளர்   சுஜாதா குலேந்திரன் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  பாடசாலை மாணவர்களில் 2020 ஆண்டு பரீட்சைகளுக்கு   தோற்றவுள்ள  மாணவர்களுக்கான செயல்முறை பயிற்சி கருத்தரங்குகள்   முன்னெடுக்கப்பட்டு வறுகின்றன

அந்தவகையில்  மட்டக்களப்பு தமிழ்   சங்கத்தின் தலைவர் சைவ  புரவர்  வி .. ரஞ்சிதமூர்த்தி   தலைமையில்  துணைத்தலைவர்  அருட்தந்தை எ  . நவரெட்ணம்  ஒழுங்கமைப்பில்  2020  உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தமிழ் பாடத்திற்கான செயல்முறை பயிற்சி கருத்தரங்கு இன்று  மட்டக்களப்பு தமிழ் சங்க மண்டபத்தில்  நடைபெற்றது .

மட்டக்களப்பு தமிழ்   சங்கத்தின் தலைவர் சைவ  புரவர்  வி .. ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற செயல்முறை பயிற்சி கருத்தரங்கில்  வளவாளராக மட்டக்களப்பு கல்வி வலயத்தின்  தமிழ் மொழிக்கான ஓய்வுநிலை  உதவி கல்விப்பணிப்பாளர்  த . யுவராஜா , மட்டக்களப்பு தமிழ்   சங்கத்தின் செயலாளர் வி .தவராஜா  மற்றும் மட்டக்களப்பு கல்வி வலயத்தில்  2020 ஆண்டு உயர்தர பரீட்சைக்கு   தோற்றவுள்ள  மாணவர்கள் , ஆசிரியர்கள் , மட்டக்களப்பு தமிழ்   சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்

Related posts