மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் 13,வது நிகழ்வு

மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் கிறிஸ்மஸ் பிரார்த்தனை நிகழ்வின்போது கடந்த 2005 டிசம்பர் 25 அன்று ஒட்டுக்குழுவால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 13வது ஆண்டு நினைவுநிகழ்வு எதிர்வரும் 25.12.2018 செவ வாய்கிழமை பி.ப:2 மணிக்கு மட்டக்களப்பு திருமலைவீதீ அமெரிக்கன் மெஷன் மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சி மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் வழமைபோன்று இவ்வருடமும் உணர்வுரீதியாக இடம்பெறவுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி தலைவர் கி.சேயோன் தலைமையில் இடம்பெறும் இந்த நினைவு நிகழ்வில் நினைவுப்பேருரையினை தமிழ்த்தேசியக்  கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் ஐயா ஆற்றவுள்ளார். 

மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் திருவுருவ படத்துக்கு மலர்மாலை அணிவித்தல். நினைவுச்சுடர்கள் ஏற்றுதல், நினைவு வணக்கம் செலுத்துதல், மலரஞ்சலி வணக்கம்,அகவணக்கம் என்பனவற்றுடன் நினைவு பேருரை இடம்பெறும்.

இந்த நிகழ்வில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்னாள் கிழக்குமகாண அமைச்சர்கள்,முன்னாள் கிழக்கு மகாணசபை உறுப்பினர்கள், தமிழ்தேசியகூட்டமைப்பு மாநகர முதல்வர்,பிரதி முதல்வர்,பிரதேசசபை தவுசாளர்கள்,மாநகர பிரதேசபைகளின் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Related posts