மாருதி பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா…

 

வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா இன்று வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் பாலர் பாடசாலையின் தலைமை ஆசிரியை சறோஜினி மகேஸ்வரநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஆரம்பக் கல்விக்கான கிழக்கு மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் தி.பார்த்தீபன், உட்பட பல கல்வி சார் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், பிற பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது சிறுவர்களின் விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் உடற்பயிற்சிக் கண்காட்சி என்பன சிறப்பாக நிகழ்த்தப்பட்டன. அத்துடன் ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து வெற்றியீட்டியவர்களுக்கு அதிதிகளால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பித்தக்கது.

Related posts