மாவீரர்களுக்காக நினைவு கூறப்படுகின்ற நாளில் அரசியல் மேடைப்பேச்சுற்கு இடமில்லை

மாவீரர்களுக்காக நினைவு கூறப்படுகின்ற நாளில் அரசியல் மேடைப்பேச்சுற்கு இடமில்லை என்கின்றனர் அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லப் பணிக்குழுவின் தலைவர் நாகமணி கிருஸ்ணபிள்ளை.
எதிர்வரும் கார்த்திகை 27 ஆம் திகதி வட கிழக்கு பகுதிகளில் மாவீரர் துயிலுமில்லங்களில் மிக விமர்சையாக நடைபெற ஏற்பாடுகள் பரவலாக இடம்பெற்றுவருகின்றன.
அந்தவகையில் அம்பாறை மாவட்டத்தில் பெயர் போன கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லங்களில் முன்னேற்பாடுகள் மற்றும் நிகழ்வுகள் தொடர்பாக அதன் பணிக்குழுவினரின் கலந்துரையாடல்  20  திருக்கோவில் 01 வாகீஸ்டர் வீதியில் அமைந்துள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்கப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கும் போதே அப்பணிக்குழுவின் தலைவர் நாகமணி கிருஸ்ணபிள்ளை இவ்வாறு தெரிவித்திருந்தார்.
மேலும் இது தொடர்பான கூறுகையில்
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்ட கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லமானது ஒரு பெயர் போன துயிலுமில்லமாகும் காரணம் பெரும்பாலான எண்ணூறுக்கு மேற்பட்ட மாவீரர்களின் வித்துடல்கள் இத்துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டுள்ளன அந்தவகையில் எதிர்வரும் கார்த்திகை 27 ஆம் திகதி நடைபெற ஏற்பாடு செய்திருக்கின்ற மாவீரர் தின அனுஸ்டிப்பு நிகழ்வில் இன மத கட்சி பேதமின்றி அனைவரும் வருகை தந்து எமது தேசத்திற்காகவும் எமது மண்ணிற்காகவும் உயிர்நீத்த மாவீரர் செல்வங்களுக்கு மலரஞ்சலி செலுத்தி அகவணக்கம் செய்யுமாறு சகலரையும் அழைப்பு விடுக்கின்றோம் எமது பணிக்குழுவின் சார்பில்.
அத்துடன் அன்றைய நாளில் மக்களுக்காக போக்குவரத்து மற்றும் மதிய உணவு நீர் வசதிகள் ஆகியன ஏற்பாடு செய்துள்ளோம் அதன் பிரகாரம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகலரும் இந்நிகழ்விற்கு கலந்து கொள்ள முடியும் இது மாவீரர்களுக்காக நினைவு கூறப்படுகின்ற நாள் என்பதனால் இங்கு அரசியல் மேடைப்பேச்சிற்கு இடமில்லை ஆகையினால் அந்நாளில் மிக உணர்வுபூர்வமாக இந்நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்புவிடுக்கின்றோம் என கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்ல பணிக்குழுவின் தலைவர் நாகமணி கிருஸ்ணபிள்ளை கருத்துத்தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வூடக சந்திப்பின் போது அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts