மின்சார நுகர்வு தொடர்பில் வெளியான தகவல்

கடந்த இரண்டு மாதங்களில் நாட்டின் மின்சார நுகர்வு 20% க்கும் அதிகமாக குறைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தினசரி மின் நுகர்வு விகிதம் குறைந்தபட்சம் 48 மெகாவோட் என்றும், உச்சி நேரத்திற்கு 2,800 மெகாவோட் மின்சாரம் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், கடந்த இரண்டு மாதங்களில், மின் நுகர்வு 38 முதல் 40 மெகாவோட் மணி வரை இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

உச்சி நேரத்தில் தேவைப்படும் மின்சாரத்தின் அளவு 2,100 மெகாவோட்டாக குறைக்கப்பட்டது. இது 20% குறைப்பை பிரதிபலிக்கிறது என்று ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts