மீனவர்களுக்கு அன்ரிஜன் : அனைத்தும் நெகடிவ்.!

காரைதீவு பிரதேசத்திற்குட்படட்ட  மாளிகைக்காடு மீன் சந்தையில்
உள்ளூர்வெளி மீன் வியாபாரிகளுக்கு நேற்று(19)புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டஅண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகள் அனைத்தும் நெகட்டிவ்
பெறுபேற்றைத்தந்ததாக காரைதீவு சுகாதாரவைத்தியஅதிகாரி டாக்டர் தஸ்லிமா
பஷீர் தெரிவித்தார்.
 
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணனின்
வேண்டுகோளுக்கிணங்க காரைதீவு அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி
வைத்தியர் தஸ்ஸீமா தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்
சா.வேல்முருகு, மற்றும்  பொது சுகாதார பரிசோதகர் ஜெமீல், அபிவிருத்தி
உத்தியோகத்தர் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து மேற்கொள்ளப்பட்ட
அண்டிஜென் பரிசோதனை அனைத்தும் நெகட்டிவ் பொறுபேறுகள் கிடைக்கப்
பெற்றுள்ளது.
 
இதேவேளை காரைதீவு மதுபானசாலை அமைந்துள்ள பிரதானவீதிப்பிரதேசத்திலும்
இத்தகைய அன்ரிஜன் சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Related posts