மீன்பிடிக்கச்சென்றவர் நீரில் மூழ்கி பலி கரடியநாற்றில் சம்பவம்

கரடியநாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தம்புரி குளத்திற்கு மீன்பிடிக்கச்சென்றவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் நேற்று(05) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
பங்குடாவெளி நெல் போடியார் கல் பிரதேசத்தை சேர்ந்த(76) வயதுடைய சின்னத்தம்பி நடராசா என்பவர் சம்பவ தினத்தன்று பங்குடாவெளி இருந்து புத்தம்புரி குளத்திற்கு மீன் பிடிப்பதற்காக சென்றிருந்ததாகவும் சம்பவ தினத்தன்று குளத்தில் தோணி மாத்திரம் நிற்பதனை அவதானித்த ஏனைய மீன்பிடியாளர்கள் ஏனையவர்களின் உதவியுடன் தோணியின் அருகில் அண்மித்த போது குறித்த நபர் தோணியிலிருந்து விழுந்து நீரில் மூழ்கி  மரணித்திருப்பதையும்இ அவரது ஒரு கால் மட்டும் தோணிக்குள் வலையில் சிக்குண்டு இருப்பதையும் அடையாம் கண்டதும் உடன் அவரது குடும்ப உறவுகளுக்கு விடயத்தை தெரிவித்திருக்கிறார். வலிப்பு நோயாளியான இவருக்கு தோணியிலிருக்கும் போதே வலிப்பு ஏற்பட்டதால்தான் குளத்தினுல் விழுந்து மரணித்திருக்கிறார் என விசாரணைகளின் போதே தெரியவந்துள்ளது.
 
ஏறாவூர் நீதிமன்ற  நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கரடியநாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts