மீள்பரிசீலனைக்கு 35 ஆயிரம் விண்ணப்பங்கள்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றின் மீள் பரிசீலனைக்காக, 35,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மீள்பரிசீலனை விண்ணப்பங்கள் தொடர்பில் அடுத்த வாரம் முதல் ஆராயவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மீள்திருத்தப் பெறுபேறுகளை இம்மாத இறுதியில் வெளியிடத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நடாத்தப்பட்டதுடன், அதில் பரீட்சைக்கு 3,55,326 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts