மூத்த ஓய்வு நிலை அதிபர் தங்கராஜா காலமானார்.

காரைதீவின் மூத்த ஓய்வு நிலை அதிபரும், பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலய தர்மகத்தாவுமான  இளையதம்பி தங்கராசா நேற்று (11) பௌர்ணமி அன்று காலமானார்.
 
அவருக்கு வயது 92 ஆகும்.
 
 3 பிள்ளைகளின் தந்தையான இ. தங்கராசா சமூக வாழ்வில் தன்னை பூரணமாக ஈடுபடுத்திக் கொண்ட ஒரு சமாதான  நீதிவான் .
 
 காரைதீவிலுள்ள பல பொது அமைப்புகளிலும் தலைமை தாங்கி  வழிகாட்டல்களை செய்து வந்த ஒரு தலைவராவார்.
 
 அவர்  ,முன்னாள் காரைதீவு கிராம சபை அக்கிராசனரும்,  அம்பாறை மாவட்ட அபிவிருத்தி சபை உறுப்பினராகவும், வளர்ந்தோர் கல்வி அதிகாரியாகவும் இருந்து காரைதீவுக்கு பல சேவைகளை ஆற்றிய மறைந்த இ.வினாயகமூர்த்தி அவர்களின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 அன்னாரின் தகனக்கிரியை, நாளை மறுநாள் (14) ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு முப்பது மணி அளவில் காரைதீவு இந்து மயானத்தில் நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
 
அன்னாரின் மறைவு தொடர்பில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் வெளியிடப்பட்ட அனுதாபக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது….

Related posts