மூன்று தினங்களுக்கு விசேட விடுமுறை

கொரோனா வைரஸ் காரணமாக மூன்று தினங்களுக்கு விசேட விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கமைய செவ்வாய் கிழமை முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரையில் விசேட விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

வங்கிகள், சுகாதாரம், உணவு விநியோகம், போக்குவரத்து, மாவட்ட செயயலாளர் காரியாலயங்கள், பிரதேச காரியாலயங்கள், அத்தியாவசிய சேவை தவிர்த்த அரச கூட்டுதாபன திணைக்களங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்த பொது விடுமுறை அமுலாகும் என்பதோடு தனியார் நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts