மேயரின் மனிதாபிமான முன்மாதிரி!

மாத்தளை மாநகரில் , ஊரடங்கு  காரணமாக முறையான உணவின்றி அலைந்து திரிந்த  யாசகர்களுக்கு   உணவளித்து நிதி வழங்கிய சம்பவம் நேற்று(14) இடம்பெற்றுள்ளது.
 
மாத்தளை மாநகரசபை மேயர் சந்தனம் பிரகாஷ் இவ்வாறு யாசகர்களுக்கு மனிதாபிமான உதவியைச்செய்தார்.
 
நேற்று ,களுதாவளைப்பகுதியில் கார்ப்பட் வீதி செப்பனிடும் பணியை மேற்பார்வை செய்துவிட்டு திரும்புகையில் மாநகரில் ஒரு தொகுதி யாசகர்களை கண்ட மாத்தளை மேயர் வாகனத்தை நிறுத்திவிட்டு இக்கைங்கரியத்தை செய்தார்.

மேலும் ,அவர்களிடம் கலந்துரையாடலிலும் ஈடுபட்டதோடு, சிலரது குடும்பநிலைவரம் கருதி  மேலும் உதவவும் திட்டமிட்டுள்ளார்.
 
யாசகர்களுக்கு ஒரு மேயர் இவ்விதம் மனிதாபிமான உதவியைச் செய்தமையை ஒரு முன்மாதிரியாக பதிவுசெய்து சமுகவலைத்தளங்களில் பாராட்டி பதிவேற்றம் செய்யப்பட்டுவருகிறது.

Related posts