மேலும் 1லட்சம் தடுப்பூசிகள் இன்றோ நாளையோ கிடைக்கலாம்!இரண்டரை லட்சம் பேருக்கு தடுப்பூசி தேவை:இதுவரை 50ஆயிரம்!கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகுணன்

எமக்கு முதற்கட்டமதாக வழங்கப்பட்ட 50ஆயிரம் சினோபாம் தடுப்பூசிகள் அனைத்தும் இருநாட்களில் 13 சுகாதாரப்பிரிவுகளிலும் செலுத்தப்பட்டுவிட்டன. மேலும் 1லட்சம் தடுப்பூசிகள் இன்றோ நாளையோ கிடைக்கலாம். அப்படி வருகின்றகட்டத்தில் இரண்டாம்கட்ட தடுப்பூசி வழங்கல் மிகவும் துரிதமாக நடைபெறும்.
 

என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.குண. சுகுணன் தெரிவித்தார்.


நீண்ட எதிர்பார்ப்புகளின்பின்னர் ஆரம்பிக்கப்பட்ட  கல்முனைப் பிராந்தியத்திற்கான தடுப்பூசி செலுத்தும் முதற்கட்டப்பணிகள் நேற்றுடன்(26) திங்கட்கிழமை  நிறைவடைந்தது.  இதற்கென 50ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்று கடந்த சனிக்கிழமை முதல் சகல 13சுகாதாரப்பிரிவுகளிலும் ஏற்றப்பட்டு வந்துள்ளது.முதலிருநாட்களில் 45201பேருக்கு செலுத்தப்பட்டிருந்தது. இது மாகாணத்தில் சாதனை என்று கூறலாம்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:
கல்முனைப்பிராந்தியத்தில் 4லட்சத்து 88ஆயிரம் பேர் சனத்தொகையாகப்பதிவிடப்பட்டுளள்து. இவர்களில் 2லட்சத்து 50ஆயிரம் பேர் தடுப்பூசி பெற தகுதியாவர்களாவர். எனவே 5லட்சம் தடுப்பூசிகள் தேவையாகின்றன.

பிராந்தியத்தின் கணக்கெடுப்பின்படி 60வயதுக்கு மேற்பட்டவர்கள் 51ஆயிரம் பேராவர். ஆசிரியர்கள் 85000பேருள்ளனர். அரசஊழியர்கள் 15ஆயிரம் பேருள்ளனர். முப்படை பொலிசார் 2500பேரம் கர்ப்பிணித்தாய்மார்கள் 1500பேரும் உள்ளனர்.

இந்தநிலையில் முதலில் கிடைக்கப்பபெற்ற 50ஆயிரம் தடுப்பூசிகள் வெற்றிகரமாக ஏற்றப்பட்டுள்ளன.
மேலும் விரைவில் அடுத்ததொகுதி தடுப்பூசிகள் வந்துசேர்ந்தவுடன் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும்பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றார்.

கல்முனைப்பிராந்தியத்திலுள்ள  13 சுகாதாரவைத்தியஅதிகாரிகள் பிரிவுகளிலுள்ள 07ஆதாரவைத்தியசாலைகளிலும் 13 பிரதேச வைத்தியசாலைகளிலும் சுகாதாரப்பிரிவினர் ஏற்படுத்தும் பாடசாலைகள் போன்ற விசேடமையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டன.

வைத்தியசாலைகளில் நோய்வாய்ப்பட்ட 60வயதுக்கு மேற்பட்டோர் கர்ப்பிணித்தாய்மார்கள் பாலூட்டும் தாய்மாhர்கள் போன்றோருக்கு முதலில் ஏற்றப்பட்னன.
முதற்கட்டமாக 60வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இத்தடுப்பூசி வழங்கப்பட்டன.

அதேவேளை பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டன.

Related posts