மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கு நடவடிக்கை

450 க்கும் ஆயிரத்திற்கும் இடைப்பட்ட என்ஜின் வேகத்தைக் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தத் தீர்மானத்திற்கு இணங்க எதிர்காலத்தில் 450 க்கும்1000ற்கும் இடைப்பட்ட என்ஜின் வேகத்தைக் கொண்ட மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts