மோட்டார் மற்றும் இரண்டு கை குண்டுகள் பொலிசாரினால் மீட்பு.

திருக்கோவில் பொலிஸ்ப்பிரிவில் ஒரு மோட்டார் மற்றும் இரண்டு கை குண்டுகள் பொலிசாரினால் மீட்பு.
 
அம்பாரை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் மற்றும் பாவட்டா றுபஸ் வயல் பிரதேசத்தில் இருந்து கைக் குண்டுகள் மற்றும் ஒரு மோட்டார் ரக குண்டுகள் என்பன கண்டுபபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்து இருந்தனர்.
 
இவ் குண்டுகள் அனைத்தும் பொது மக்களின் ஊடாக பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலின் ஊடாக சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்ற திருக்கோவில் பொலிஸ் குழுவினர் மற்றும் இராணுவ அதிகாரிகள் மேற்படி குண்டுகளை கைப்பற்றி இருந்தனர்.
 
அந்தவகையில் நேற்று முன்தினம் இரண்டு கைகுண்டுகள் மீட்கப்பட்ட செயலிழக்கச் செய்யப்பட்டு இருந்த அதேவேளை நேற்று மாலை ஒரு மோட்டார் ரக குண்டு பொலிசாரினால் மீட்கப்பட்டு இருந்தன.
 
இவ்வாறு மீட்கப்பட்ட குண்டுகள் நீதிமன்ற உத்திரவின் பிரகாரம் இராணுவத்தின் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் குண்டுகள் இன்று காலை செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக படைதரப்பினர் தெரிவித்து இருந்தனர்.

Related posts