யானைகள் அட்டகாசம் ; ஒருவர் காயம்

அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட நீத்தை -ஹிழ்று நகர் கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் ஒருவர் காயமடைந்துள்ளதோடு, உடைமைகளையும் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன. 

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று அதிகாலை நான்கு மணியளவில் நீத்தை -ஹிழ்று நகர்க் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் சில மூன்று வீடுகளை உடைத்துச் சேதப்படுத்தியதுடன், பயன்தரு மரங்களையும் நாசப்படுத்தியுள்ளன.

இதன்போது, வீடொன்றில் இருந்தவர்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் காட்டு யானைகள் அவ்வீட்டைத் தாக்கியுள்ளதால், வீட்டின் சுவர் உடைந்து குடும்பத் தலைவரின் மீது விழுந்ததில் அவர் காயமடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

அத்தோடு தென்னை மரங்களையும் மேட்டு நிலப் பயிர்களையும் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன.

Tags: #Akkaraipattu#நீத்தை -ஹி

Related posts