யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு? கடும் அச்சத்தில் தமிழர்கள்! தொடரும் மர்மம்

யாழ். மாதகல் பகுதியில் பொலிஸாரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் தாம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவில்லை என பொலிஸார் மறுப்பு வெளியிட்டுள்ளனர்.

இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாதகல் பகுதியில் கஞ்சா போதைப்பொருள் வியாபாரியை பொலிஸார் கைது செய்ய முயன்றபோது, சந்தேகநபர் அங்கிருந்து தப்பி செல்ல முற்பட்டுள்ளார்.

இதன்போது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

அத்தோடு குறித்த நபரை பொலிஸார் கைது செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எனினும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை இளவாலை பொலிஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Related posts