யாழ்-சண்டிலிப்பாயில் வாள்களுடன் நின்ற கும்பல் ஒன்று பெரும் அட்டகாசத்தில்

சண்டிலிப்பாயில் வாள்களுடன் நின்ற கும்பல் ஒன்று பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டது. வீதியில் போவோர் வருவோரை மடக்கி, மிரட்டியது, முகத்தை மூடி துணிகட்டி வாள்களுடன் நின்றவாறு இந்தக் குழு அட்டகாசம் செய்துள்ளது.

சம்பவம் 28  இரவு சண்டிலிப்பாய் இரட்டையபுரம் வைரவர் கோவிலை அண்டிய பகுதி, ஆலங்குளாய், கல்வளை, சண்டிலிப்பாய் வடக்கு போன்ற இடங்களில் இடம்பெற்றது.வீதியில் சென்ற வாகனங்களை இந்தக் குழு அடித்து நொருக்கியது. ஒருவருடைய மோட்டார் சைக்கிளையும் பறித்துச் சென்றுள்ளனர். ‘‘உயிர் வேண்டுமா, பைக் வேண்டுமா’’ கேட்டு வாளைக் காட்டி மிரட்டியதை அடுத்து மோட்டார் சைக்கிளைக் கொடுத்து விட்டுத் தப்பினார் ஒரு இளைஞர்.முகத்தை மூடித் துணியால் மறைத்தவாறு 8 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10க்கும் மேற்பட்டவர்களே இவ்வாறு அடாவடித்தனத்தில் ஈடுபட்டனர்தையல் கடைக்குள் நின்ற இளைஞனை மிரட்டியே மோட்டார் சைக்கிள் பறிக்கப்பட்டது. வீதியால் சென்றவர்கள் வாள்களுடன் நடமாடியவர்களைக் கண்டு, வாகனங்ளை விட்டுவிட்டுச் சிதறி ஓடியுள்ளனர். அவர்கள் தப்பித்தாலும், வாகனங்கள் வாள்வெட்டுக்கு இலக்காகின. சிறிது நேரம் அங்கு தரித்து நின்ற வாள்வெட்டுக் கும்பல் அங்கிருந்து சென்றது.

சம்பவம் குறித்துக் கேள்விப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்தார். நிலமைகளைக் கேட்டறிந்தார். பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸாருக்கு தகவல்களை வழங்கினர்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்வதாக பொலிஸார், நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மற்றும் மக்களுக்கு உறுதியளித்தனர். மேலதிக விசாரணைகளையும் சம்பவ இடத்தில் பொலிஸார் மேற்கொண்டனர்

Related posts