ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை; கூட்டமைப்பும் ஆதரவு வழங்க தீர்மானம்!

சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி யினர் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்கத் தீர்மானித்திரு க்கின்றது.

இந்தத் தகவலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அந்த கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட்டின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

Related posts