ரிஷாட் பதியூதினின் மனைவி உட்பட மூவர் சற்றுமுன் கைது

ரிஸாட் பதியூதினின் மனைவி, சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த தரகர் உட்பட மூவர் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரிஷாட் பதியூதினின் வீட்டில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த மூவரிடமும் நேற்று மாலை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Related posts