வந்தாறுமூலையில் இளம் யுவதியின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலிருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று (சனிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை விஷ்ணு கோவில் வீதியருகிலுள்ள வீடுடொன்றிலிருந்தே குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அழகரத்தினம் டிசாந்தினி (வயது 24) எனும் இளம் குடும்பப் பெண்ணே, இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இச்சம்பவம் இடம்பெற்றபோது, பெண்ணின் கணவனும், ஒரு வயது குழந்தையும் வீட்டில் இல்லை எனவும், அவரது தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts