வயல் பிரதேசத்தில் இருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
நெல்லிக்காட்டு பிர்தேசத்தில் சம்பவம்

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காட்டு பிரதேசத்தில் உள்ள வயல் பிரதேசத்தில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
நேல்லிக்காட்டு பிரதேசத்தைச்சேர்நத (73) வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான அழகிப்போடி தற்கராசா என்பவரே சடலமாக மீட்கப்பட்;டவராவார்.
 
களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக  சம்பவ இடத்திற்குச் சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை-தவக்குமார்  சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts