வருடங்களின்பின் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் மஹா கும்பாபிசேகம்! Inbox x

கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் 2000 வருடங்கள் பழைமை வாய்ந்த திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின்  மஹாகும்பாபிசேகம் எதிர்வரும் 25.06.2018இல் நடைபெறவுள்ளது.
 
எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.35மணி முதல் 10.25மணி  வரையான சுபவேளையில் கும்பாபிசேக பிரதமகுரு சிவாகமவித்தியாபூசணம்  விபுலமணி. சிவஸ்ரீ.சண்முகமகேஸ்வரக்குருக்கள் தலைமையில்  மகாகும்பாபிசேக குடமுழுக்குப்பெரும்சாந்தி பெருவிழா நடைபெற உள்ளது.
 
 
கடந்த 2015இன் கடைக்கூற்றில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. 15வருடங்களுக்குப்பிறகு எதிர்வரும் 25ஆம் திகதி மகாகும்பாபிசேகம் நடைபெறவுள்ளது.
அம்பாறை மாவட்டத்திலே முதன்முதலாக 17குண்டங்களைக்கொண்டு மகாகும்பாபிசேகமொன்று நடைபெறவிருப்பது இதுவே முதற்தடவையாகும் என ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.சண்முக மகேஸ்வரக்குருக்கள் தெரிவித்தார்.
 
 
ஆலயநிருவாகம் பிரதமகுருக்கள் சிவஸ்ரீ.சண்முக மகேஸ்வரக்குருக்களின் ஆலோசனையில் மகா கும்பாபிசேகம் செய்ய திருவருள் கூடியுள்ளது என ஆலய பரிபாலனசபையின் தலைவர் சு.சுரேஸ் செயலாளர் எ.செல்வராஜா ஆகியோர் தெரிவித்தனர்.
 
கும்பாபிசேகத்திற்கான யந்திரபூசைகள் யாவும் மே 5இல் கோலாகலமாக ஆரம்பமாகியது. 
 தொடர்ந்து எதிர்வரும்  18இல் கர்மாரம்;பத்துடன் கிரியைகள் ஆரம்பமாகும். 18ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதிவரை காலை 8மணிமுதல் கும்பாபிசேகத்திற்;கான முன்னோடிக்கிரியைகள் நடைபெறும் 
 
23ஆம் திகதி காலை 7மணி முதல் 24ஆம் திகதி மாலை 5மணிவரை  எண்ணெய்க்காப்புசாத்தும் நிகழ்வு நடைபெறும்.
 
ஆரம்பத்தில் 23.10.1828ம் திகதி மீனலக்ன சுபவேளையில் குடமுழுக்குப் பெற்றதாக அறியமுடிகிறது. காலந்தோறும் ஆலய திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு புனராவர்த்தன மகா கும்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளன. இறுதியாக 12.06.2003 அன்று நடைபெற்றது. 
 
அதன்பின் 15வருடங்களின் பின்பு தற்போது நடைபெற விரிவான ஏற்பாடுகளைச்செய்து பூர்த்தியடைந்திருப்பதாக ஆலய பரிபாலனசபையின் தலைவர் சு.சுரேஸ் செயலாளர் எ.செல்வராஜா ஆகியோர் தெரிவித்தனர்.
 
23ஆம் 24ஆம் 25ஆம் திகதிகளில் அன்னதானம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கும்பாபிசேகசெயற்குழுத்தலைவர் க.பாஸ்கரன் தெரிவித்தார்.
 
கிழக்குமாகாண உதவி நீர்ப்பாசனப்பணிப்பாளர் எந்திரி. வி.இராஜகோபாலசிங்கம் தலைமையிலான குழுவினரின் ஆலோசனையின்பேரில் புனருத்தாரண வேலையை முன்னெடுக்க 27பேர் கொண்ட திருப்பணிச்சபையொன்று சி.சதீஸ்குமார் தலைமையில் திருக்கோவில் பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜனைக் காப்பாளராகக்கொண்டு அமைக்கப்பட்டு தற்போது ஆலயம் புதுப்பொலிவுபெற்றுள்ளது.
 
ஆகம விதிகளுக்கும் சிற்பவிதிமுறைகளுக்கமைவாகவும் சிற்பங்கள் பொம்மைகள் அமைக்கின்றபணிகளை அனுபவம் வாய்நத சிற்பாச்சாரியார் முருகேசு வினாயகமூர்த்தி லுகன்  ரகு மகேஸ்வரன் மற்றும் வர்ணம் தீட்டுதலில் புகழ்பெற்ற ஓவியர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் மேற்கொண்டுவந்தனர்.
 
மூலஸ்தாபன கருவறை பிரகாரக்கோயிலான பிள்ளையார்  வசந்தமண்டபம் நவக்கிரகம் சண்டேசுவரர் ஆலய புனருத்தாரணம் என்பன ஆலய நிருவாகத்தினர் மற்றும் பஞ்சயாத்துசபையினரின் நேரடிப்பங்களிப்பிலே நடைபெற்றன..

Related posts