வருடாந்த பொதுக்கூட்டம் ஊடகவியலாளர் சந்திப்பும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 30 வருடகாலமாக இயங்கி வரும்  மாவட்ட சிவில் சமூக  அமைப்பின்  2020 ஆண்டுக்கான பொதுக்கூட்டம்  சங்கத்தின் தலைவர் மாமாங்கராஜா தலைமையில் நேற்றுமாலை  மட்டக்களப்பில் நடைபெற்றது .

மாவட்ட சிவில் சமூக  அமைப்பின் உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில்   சங்கத்தின் கடந்த கால செயல்பாடுகள் தொடர்பான ஒளிப்பதிவு காணொளி  காட்சிப்படுத்தப்பட்டதுடன்   தொடர்ந்து  2020 ஆண்டுக்கான நிர்வாக தெரிவும் இடம்பெற்றது .

 இதன்போது  கடந்த காலங்களில்  அமைப்பின்  நிர்வாக உறுப்பினர்களாக செயல்பட்ட  உறுப்பினர்கள்  ஏகமனதாக மீண்டும் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர் .

நிர்வாக உறுப்பினர்கள் தெரிவின் பின்  சங்க உறுப்பினர்களின்  விமர்சன கருத்து  பரிமாறல்கள் இடம்பெற்றன .  இதனை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் சிவில் சமூக  அமைப்பின் அரசாங்கத்திடம்  முன்வைக்கப்படவுள்ள  மாவட்டத்தின் அபிவிருத்தி   தொடர்பான   விடயங்கள் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது .

இந்நிகழ்வில்  மாவட்ட சிவில் சமூக அமைப்பின் போசகரான மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை , அருட்தந்தையர்கள் , பாடசாலை அதிபர்கள் , கல்வித்திணைக்கள அதிகாரிகள் , வர்த்தக சங்க உறுப்பினர்கள் , ,பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ,வைத்தியர்கள் என  சிவில் சமூக அமைப்பின் உறுப்பினர்கள்  கலந்துகொண்டனர்

Related posts